2016-08-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2016 ஆம் ஆண்டு சார்பில் தரைப்படை, கடற்படை, விமானப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சீருடை மற்றும் ஏனைய துணி வகைகளைப் பெற்றுக் கொள்ளல் - முப்படைகளினதும் பாதுகாப்பு அமைச்சின் கீழுள்ள ஏனைய நிறுவனங்களினதும் சீருடை தேவைகளை உள்நாட்டு துணி உற்பத்தியாளர்களிடமிருந்து நிறைவு செய்து கொள்வது 2005 ஆம் ஆண்டிலிருந்து அமுலில் உள்ளதோடு, இந்த பணிகள் கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள உள்நாட்டு துணிவகைகளைக் குறித்தொதுக்கும் குழுவினால் மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கமைவாக, 2016 ஆம் ஆண்டு சார்பில் தரைப்படை, கடற்படை, விமானப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சீருடை மற்றும் ஏனைய துணி வகைகளின் தேவைகளை உள்நாட்டு துணிவகை குறித்தொதுக்கும் குழுவின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளவாறு அந்தந்த உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்யும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|