• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மீனவர்களுக்கு வழங்குவதற்குத் தேவையான மீன்பிடி வலை உற்பத்திகளை நோர்த் சீ கம்பனியிடமிருந்து பெற்றுக் கொள்ளல்
- மீனவர்களுக்கு நிவாரணமாக பகிர்ந்தளிக்கும் பொருட்டு கடற்றொழில் மற்றும் நீரகவளமூல திணைக்களத்தினால் வருடாந்தம் கொள்வனவு செய்யும் மீன்பிடி வலைகளை 100 சதவீதப் பங்குகள் அரசாங்கத்திற்குச் சொந்தமான கம்பனியொன்றான நோர்த் சீ கம்பனியிடமிருந்து கொள்வனவு செய்யும் பொருட்டு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினாலும் கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.