• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை முதலிய பெருந்தோட்ட துறைகள் சார்பில் பசளைக்கான நிதி மானியம் வழங்குதலை விரிவுபடுத்துதல்
- பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவின் சிபாரிசின் பிரகாரம் தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை முதலிய பெருந்தோட்ட துறைகள் சார்ந்த ஒரு ஹெக்டயர் அல்லது அதற்குக் குறைந்த பயிர்ச்செய்கை நிலங்கள் உரித்துடைய சிறிய தோட்ட உரிமையாளர்களுக்கு வருடாந்தம் அவர்களினால் பயிர்செய்ப்பட்ட காணியின் அளவுக்கு சம விகிசாரத்தில் பசளைக்கான நிதி மானியம் வழங்குவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்போது தேயிலை பயிர்ச்செய்கை சார்பில் ஹெக்டயர் ஒன்றுக்கு 15,000/= ரூபாவும் தென்னை சார்பில் ஹெக்டயர் ஒன்றுக்கு 9,000/= ரூபாவும் இறப்பர் சார்பில் ஹெக்டயர் ஒன்றுக்கு 5,000/= ரூபாவும் நிதி மானியமாக உரித்துடையதாகும். ஆர்வமுள்ள பயனாளிகள் கூடிய எண்ணிக்கையினருக்கு மானியம் வழங்கும் நோக்கில் இறப்பர் மற்றும் தென்னை செய்கைகளுக்காக பசளை மானியம் வழங்கும் போது தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரு ஹெக்டயர் என்னும் வரையறையை இரண்டு ஹெக்டயர்களாக அதிகரித்து பசளை மானியத்திற்கான தொகையை வழங்கும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.