• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'குளத்துடனான கிராமம் ஒன்று' நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அபிவிருத்தி நோக்கங்களுக்காக இந்திய மானிய உதவியைப் பெற்றுக் கொள்ளல்
- அம்பாந்தோட்டை மாவட்டம் சார்ந்த கடற்றொழில் உட்பட ஏனைய வாழ்வாதார அபிவிருத்தி பணிகளுக்காக பயன்படுத்தும் பொருட்டு 300 மில்லியன் ரூபாவைக் கொண்ட மானியமொன்றை இலங்கைக்கு வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இந்த மானியத் தொகையிலிருந்து ஒருபகுதியை 'குளத்துடனான கிராமம் ஒன்று' என்னும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மாதிரி கடற்றொழில் கிராமங்கள் அபிவிருத்தியின் பொருட்டு பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைவாக, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கடற்றொழிலாளர்களினதும் விவசாயிகளினதும் வாழ்வாதாரத்திற்கு ஒத்தாசை நல்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை இலங்கை சனநாயன சோசலிசக் குடியரசுக்கும் இந்திய குடியரசுக்கும் இடையில் கைச்சாத்திடும் பொருட்டு கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.