2016-08-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மாத்தளை அளுவிகாரை புண்ணியபூமி திட்டத்தின் கீழ் நிருமாணிக்கப்பட்ட அரசாங்க யாத்திரிகர் விடுதி கட்டடத்தை மாத்தளை அளுவிகாரைக்கு உடைமையாக்குதல் - மாத்தளை பிரதேசத்திற்கு வருகை தரும் யாத்திரிகர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்யும் நோக்கில் மாத்தளை அளுவிகாரை புண்ணியபூமி திட்டத்தின் கீழ் அரசாங்கத்தினால் நிருமாணிக்கப்பட்ட யாத்திரிகர் விடுதி கட்டடத்தை பராமரித்து பேணும் பொறுப்பானது 2009 ஆம் ஆண்டு முதல் ஐந்து வருட காலத்திற்கு அளுவிகாரை ரஜமஹாவிகாரைக்குக் கையளிக்கப்பட்டிருந்தது. இந்த விகாரைக்கு வருகை தரும் யாத்திரிகர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்யும் நோக்கில் குறித்த யாத்திரிகர் விடுதி கட்டடத்தை பராமரித்து பேணும் பொறுப்பை மேலும் ஐந்து வருட காலத்திற்கு மாத்தளை அளுவிகாரை ராஜமஹாவிகாரைக்குக் ஒப்படைக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |