2016-08-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பகுதியளவில் பூர்த்தி செய்துள்ள கருத்திட்டங்களை நிறைவு செய்வதற்காக நிதி ஏற்பாடுகளை குறித்தொதுக்குதல் - உரிய பிரதேசங்களில் மக்களுக்கு நலன்களை ஏற்பாடு செய்யும் நோக்கில் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்படும் தற்போது இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள பத்தரமுல்லை பொல்தூவ துணைவீதி நிர்மாணிப்பு, இமதூவ நகரத்தின் கால்வாய் முறைமையை விருத்தி செய்தல், தங்கல்லை மற்றும் அங்குனுகொலபெலஸ்ஸ வர்த்தக கட்டடத்தொகுதியை நிருமாணித்தல் மற்றும் மித்தெனிய நகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் போன்ற கருத்திட்டங்களையும் அம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் லுணுகம்வெஹர மற்றும் வலஸ்முல்ல பஸ்தரிப்பு நிலையங்களை நிருமாணித்தல் போன்ற கருத்திட்டங்களை பூர்த்தி செய்வதற்குத் தேவையான 516.8 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாடுகளை ஏற்பாடு செய்யும் பொருட்டும் இந்த கருத்திட்டங்களின் மீதி வேலைகளை ஆரம்ப ஒப்பந்தக்காரர்களைக் கொண்டே பூர்த்தி செய்து கொள்வதற்குமாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |