• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நல்லிணக்க பொறிமுறை ஒருங்கிணைப்புச் செயலகத்தைப் பலப்படுத்தல்
- நல்லிணக்க செயற்பாட்டுடன் தொடர்புபட்ட தீர்மானங்கள், நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் போன்றவற்றை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்தும் நோக்கில் "நல்லிணக்க பொறிமுறை ஒருங்கிணைப்புச் செயலகமானது" அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைவாக 2015 ஆம் ஆண்டின் இறுதியில் தாபிக்கப்பட்டது. இலங்கையில் நல்லிணக்கப் பொறிமுறையை திட்டமிட்டு நடைமுறைப்படுத்தும் பொறுப்பானது இந்த செயலகத்துக்கு கையளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இலங்கையில் நல்லிணக்க செயற்பாட்டிற்குள் கொள்கை ஆக்கும் நிறுவனங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் என்பவற்றுக்கு இடையிலான நிறுவனமொன்றாக செயலாற்றி இந்த பணிகளை இலகுபடுத்துவது இந்த செயலகத்தினால் மேற்கொள்ளப்படும். இதற்கமைவாக இந்த அலுவலகத்துக்குத் தேவையான மனிதவளங்களையும் நிதியையும் பெற்றுக் கொள்ளும் பொருட்டு பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.