• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்ளூராட்சி மன்றங்களை விருத்தி செய்யும் துறைசார் கருத்திட்டத்திற்கு (புர நெகும) மேலதிக நிதி ஏற்பாடுகளை பெற்றுக் கொள்ளல்
- ஆசிய அபிவிருத்தி நிதியத்தினாலும் இலங்கை அரசாங்கத்தினாலும் நிதியளிக்கப்படும் 67.84 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட முதலீ்ட்டின் மூலம் உள்ளூராட்சி மன்றங்களை விருத்தி செய்யும் துறைசார் கருத்திட்டத்தின் (புர நெகும) கீழ், நீண்டகால சிறுநீரக நோய் பரவலாகக் காணப்படும் வடமத்திய மாகாணத்தின் அநுராதபுரம் மற்றும் பொலன்நறுவை மாவட்டங்களிலும் மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்திலும் ஊவா மாகாணத்தின் பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வடமேல் மாகாணத்தின் புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் உரிய பிரதேசங்கள் சார்பில் சுத்தமான குடிநீர் வழங்குவதற்கும் மாகாண மட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் உட்கட்டமைப்பு வசதிகளையும் அடிப்படை சேவைகளையும் வழங்குவதை விருத்தி செய்வதற்கும் கருத்திட்டத்தின் கீழ் தழுவப்படும் உள்ளூராட்சி நிறுவனங்கள் சகலவற்றிலும் மீள் ஒழுங்கமைப்புப் பணிகளும் ஆற்றல் அபிவிருத்தி பணிகளையும் நிலையான தன்மையில் பேணும் பொருட்டு நடவடிக்கை எடுப்பதற்காக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.