2016-08-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பிரதேச ரீதியாகவுள்ள நீதிமன்றங்களுக்கு புதிய உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல் - கொழும்புக்கு வெளியே / மாகாணங்களில் அமைந்துள்ள நீதவான் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் பெரும்பாலானாவை மிக பழமைவாய்ந்தவையாகவும் குறைந்த வசதிகளுடனுமான கட்டடங்களில் நடாத்தப்பட்டுவருகின்றதோடு, இதன் காரணமாக உரிய பிரதேசங்களில் நீதித்துறை சேவைகளை தடையின்றி நடாத்திச் செல்வதில் பிரச்சினைகள் நிலவுகின்றது. இதற்கமைவாக 1,172 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பிடப்பட்ட செலவில் கம்பொல, ருவண்வெல்ல, முல்லைதீவு மற்றும் பஸ்ஸறை பிரதேசங்களிலுள்ள நீதிமன்றங்களுக்கு புதிய கட்டடங்களை நிருமாணிப்பதற்கும் மாங்குளம் பிரதேசத்தில் சுற்றுலா நீதவான் நீதிமன்றமொன்றைத் தாபிப்பதற்குமாக நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |