2016-08-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஏற்றுமதிமூலம் கிடைக்கும் பணத்தை அனுப்புவதற்காக செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் 22(4) ஆம் பிரிவின் கீழ் அங்கீகாரம் வழங்குதல் - செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் ஏற்றுமதி மூலம் இலங்கைக்குக் கிடைக்கும் பணத்தொகை உரிய பொருள் ஏற்றுமதி செய்யப்பட்ட திகதியிலிருந்து 90 நாட்களுக்குள் அனுப்பப்படுதல் வேண்டும். இயைபுள்ள தரப்பினர்களின் கோரிக்கையைக் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு, இந்தக் காலப்பகுதியை 2016 ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் விதத்தில் 120 நாட்கள் வரை நீடிப்பதற்கும் 120 நாட்கள் முடிவடைந்ததன் பின்னர் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் 30 நாட்களைக் கொண்ட சலுகைக் காலமொன்றை வழங்குவதற்குமாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |