2016-08-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
புலம்பெயர் சுகாதாரம் பற்றிய இரண்டாவது உலக சுகாதார ஆலோசனை கூட்டத்தொடர் - 2016 ஒக்ரோபர் 25 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரை இலங்கையில் நடாத்துதல் - புலம்பெயர்ந்தவர்களின் சுகாதாரப் பாதுகாப்புத் தொடர்பில் சர்வதேச சமூகம் கவனம் செலுதப்பட வேண்டிய முக்கிய பொது பிரச்சினைகளை வலியுறுத்தும் நோக்கில் புலம்பெயர் சுகாதாரம் பற்றிய சர்வதேச மட்டத்திலான கலந்துரையாடலொன்று இரண்டாவது தடவையும் நடாத்தும் முக்கியத்துவம் இனங்காணப்பட்டு புலம்பெயர் சுகாதாரம் பற்றிய இரண்டாவது கூட்டத்தொடர் இலங்கையில் நடாத்தப்பட வேண்டுமென அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக புலம்பெயர் சுகாதாரம் பற்றிய இரண்டாவது கூட்டத்தொடர் சுமார் 40 நாடுகளின் பங்குபற்றுதலுடன் 2016 ஒக்ரோபர் 25 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரை இலங்கையில் நடாத்தும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|