• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காணியற்ற இராணுவ வீரர்களுக்கு குடியிருப்பதற்காக அரசாங்கக் காணிகளை வழங்கும் கருத்திட்டம்
- இலங்கையின் இறைமைக்காக இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு உயிர்நீத்த, காணாமல்போன மற்றும் அங்கவீனமுற்ற முப்படைகளினதும் பொலிஸ் திணைக்களத்தினதும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினதும் இராணுவ வீர்கள் மற்றும் அவர்களில் தங்கி வாழ்ந்தோரைப் பேணிப்பாதுகாக்கும் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக அரசாங்கத்தினால் பல்வேறுபட்ட நலனோம்பல் கருத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைவாக, அவர்களுக்கு குடியிருப்பதற்கு அரசாங்க காணிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் காணித்துண்டொன்றை வழங்கும் கொள்கையானது ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு, அரசாங்கத்தின் காணி வழங்கும் இந்த வழிமுறையில் தற்போது காணப்படும் குறைபாடுகளை தீர்த்துக் கொண்டு அதற்குத் தேவையான திருத்தங்களைச் செய்து இராணுவ செயற்பாட்டினை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்குப் பங்களிப்புச் செய்த இராணுவவீர்ர்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.