2016-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை விமானப்படைக்கு 08 புதிய பல்நோக்கு போர் விமானங்களையும் தொடர்புடைய ஆயுதங்களையும் கொள்வனவு செய்தல் - இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானங்கள் பொதுவான ஆயுட்காலத்தை விஞ்சியுள்ளதோடு, அவற்றை வேகமாக பயன்படுத்த முடியாத நிலைக்கு வந்துள்ளது. தேசிய பாதுகாப்புக்கு வரக்கூடிய எந்தவொரு எதிர்பாராத நிலைக்கு தயாராய் இருப்பதற்கும் இலங்கையின் பொருளாதார வலயத்துக்கு உரியதான விதத்தில் சமுத்திர பாதுகாப்பினை பேணும் முக்கியத்துவமும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அரசாங்கத்திடமிருந்து அரசாங்கம் கொள்வனவு செய்யும் அடிப்படையில் பல்நோக்கு போர் விமானங்களை வழங்குவதற்கு ஆவர்வமுள்ள விமான உற்பத்தியாளர்களிடமிருந்தும் துணை உற்பத்தியாளர்களிடமிருந்தும் அதிகாரம் பெற்ற அரசாங்க முகவர்களிடமிருந்தும் அபிப்பிராயம் தெரிவிக்கும் வெ ளிப்படுத்தல்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |