• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு மாவட்ட மட்டத்தில் விடுதி வசதிகளை வழங்குவதற்காக கட்டடங்களை நிருமாணித்தல்
- அரசாங்க உத்தியோகத்தர்கள் அவர்களின் வதிவிட மாவட்டத்திற்கு வெ ளியே அமைந்துள்ள சேவை நிலையமொன்றுக்கு இணைக்கப்படும் போதும் அதேபோன்று இடமாற்றம் செய்யும் போதும் தங்குமிட வசதிகளைப் பெற்றுக் கொள்ளும் நிலவும் பிரச்சினைகள் காரணமாக அவர்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டி நேரிட்டுள்ளது. அரசாங்க உத்தியோகத்தர்களில் பெரும்பாலானோர் பெண் உத்தியோகத்தர்கள் ஆகையினால் அவர்களுக்கு பாதுகாப்பான தங்குமிட வசதிகளை வழங்குவதும் அதேபோன்று திருமணமான பெண் உத்தியோகத்தர்களுக்கு அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் வசிப்பதற்கும் போதுமான தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்து கொடுப்பதும் அத்தியாவசியமானதாகும். இந்த நீண்டகால பிரச்சினைக்கு தீர்வொன்றாக வதிவிட வசதிகளை பெற்றுக் கொள்வதில் மிக பிரச்சினையான அத்துடன் கூடிய கேள்வி நிலவும் மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, கட்டம் ஒன்றில் ஐந்து மாவட்டங்களை தழுவும் விதத்தில் திருமணமான மற்றும் திருமணமாகாத உத்தியோகத்தர்களுக்கு பொருத்தமான வீட்டுத்திட்டங்களை வெவ்வேறாக நிருமாணித்தலானது ஐந்து கட்டங்களின் கீழ் ஐந்து வருடங்களினுள் மேற்கொள்ளும் பொருட்டு பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.