• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்காக புதிய மூன்று மாடி கட்டடமொன்றை நிருமாணித்தல் - கட்டம் II
- நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளையும் 95 கிாம உத்தியோகத்தர் பிரிவுகளையும் கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தில் 41,792 குடும்பங்களைச் சேர்ந்த 138,732 பேர்கள் வசிக்கின்றனர். கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்காக புதிய கட்டடமொன்றை நிருமாணிக்கும் முதலாம் கட்டமானது 2014 ஆம் ஆண்டில் முடிவுற்றதோடு, அதன்கீழ் நிருமாணிக்கப்பட்ட கட்டடத்தின் முதலாம் மாடியில் வரையறுக்கப்பட்ட இடவசதியினுள் 250 ஊழியர்களுக்கு மேற்பட்டோர் சேவையாற்றுகின்றமையினால் பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கும் போது பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி நேரிட்டுள்ளது. இதற்கமைவாக, கிளிநொச்சி மாவட்ட செயலக நிருமாணிப்பு கருத்திட்டத்தின் மீதி வேலைகளை (கட்டம் II) 565.5 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்ட மொத்த செலவில் செய்யும் பொருட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.