• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மஹியங்கனை பிரதேச செயல கத்துக்குப் புதிய இரண்டு மாடி கட்டடத்தை நிருமாணித்தல்
- ஊவா மாகாணத்திற்குரிய பிரதேச செயலகப் பிரிவுகளில் பெரிய மஹியங்கனை பிரதேச செயலகப் பிரிவானது 35 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைக் கொண்டுள்ளதோடு, சுமார் 84,000 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள் பிரதேசவாழ் மக்களின் நிருவாக தேவைகளை நிறைவேற்றும் மஹியங்கனை பிரதேச செயலகம் தற்போது நடாத்திச் செல்லப்படும் கட்டடத்தில் நிலவும் இடவசதிகள் வழங்கப்பட்டு வரும் சேவைகளுக்குப் போதுமானதாக இல்லை. இதற்கமைவாக பயனுள்ள மக்கள் சேவையொன்றை வழங்குவதற்கும் பதவியினருக்கு சிறந்த அலுவலக சூழலொன்றை உருவாக்குவதற்கு இயலுமாகும் வகையிலும் மஹியங்களை பிரதேச செயலகத்துக்கு இரண்டுமாடிகளைக் கொண்ட புதிய கட்டடமொன்றை 221 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் நிருமாணிக்கும் பொருட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.