2016-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ரொபோ தொழினுட்பத்திற்கான சிறப்பு நிலையத்தை நிறுவுதல் - உலக ரொபோ தொழினுட்ப சந்தை 2020 ஆம் ஆண்டளவில் 82.7 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை அடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையில் ரொபோ தொழினுட்பம் அடிமட்டத்தில் நிலவினாலும் வளர்ச்சியடைந்து வரும் உலகளாவிய சந்தையில் இலங்கை கைத்தொழில்களின் விளைவுப் பெருக்கத்தையும் போட்டிகரமான நிலைமையையும் மேம்படுத்தும் போது இதனால் விசேட ஒத்துழைப்பினை பெற்றுக் கொள்ளலாமென தெரியவந்துள்ளது. ரொபோ தொழினுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் செயற்பாடுகளை தானியக்கமாகவும், விளைபெருக்கத்தை அதிகரிப்பதற்கும் தரத்தை கூட்டுவதற்கும், மனிதர்களினால் நிகழும் தவறுகளை குறைப்பதற்கும் வாய்ப்பு கிடைக்கப்பெறும் இதற்கமைவாக அரசதுறையினதும் தனியார் துறையினதும் கூட்டு தொழில்முயற்சியுடன் "ரொபோ தொழினுட்பத்திற்கான சிறப்பு நிலையம்" ஒன்றை இலங்கையில் தாபிக்கும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |