2016-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையின் உயர் வகையிலான தொல்பொருட்களின் மாதிரிகளை சருவதேச கண்காட்சிகளுக்காக வழங்குதல் - இலங்கையின் உயர் வகையிலான தொல்பொருட்களை வெளிநாடுகளில் நடாத்தப்படும் கண்காட்சிகளுக்காக எடுத்துச் செல்வதற்கு வாய்ப்புகளை வழங்குமாறு சில நாடுகளிடமிருந்து அந்த நாடுகளில் தாபிக்கப்பட்டுள்ள இலங்கை தூதரகங்களிலிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இலங்கையின் சிறப்பு மிக்க வரலாற்றுக்கு சாட்சியாக இருக்கும் குறித்த தொல்பொருட்களின் விலையிடமுடியாத பெறுமதி, அவற்றின் பாதுகாப்பு, இந்த தொல்பொருட்களை பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு வழங்குதல் போன்ற முக்கிய காரணங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, எதிர்காலத்தில் அரச தலைவர்களுக்கு இடையில் உருவாக்கிக் கொள்ளப்படும் இருதரப்பு உடன்பாடுகளின் போது மாத்திரம் வெளிநாடொன்றில் கண்காட்சிக்காக வழங்கும் பொருட்டு தெரிவு செய்யப்பட்ட தொல்பொருட்களின் தரமான மாதிரிகளை தயாரிப்பது பொருத்தமானதென உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |