• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விசேட வைப்புக் கணக்குச் சட்டம்
- அந்நிய செலாவணியை பெருமளவில் நாட்டிற்குள் கொண்டுவரும் வெளிநாட்டவர்களுக்கு வதிவிட விசா வழங்குவதற்கு 2016 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டதோடு, இந்த பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு விசேட வைப்பு கணக்கு சட்டத்தை அறிமுகப்படுத்துவது அத்தியாவசி யமானதாகும். உத்தேச விசேட வைப்பு கணக்கு சட்டத்தின் மூலம் விசேட வைக்கு கணக்கு ஒன்றின் ஊடாக 300,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களை இந்நாட்டுக்கு அனுப்பும் வெ ளிநாட்டவர் ஒருவருக்கு பத்து (10) வருடகால வதிவிட விசா வழங்குவதற்கான ஏற்பாடுகள் ஏற்பாடு செய்யப்படுவதோடு, அதற்காக ஆகக்குறைந்தது 300,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களை கொண்ட நிலுவையானது பத்து (10) வருட காலத்திற்குள் வெளிநாட்டு வைப்புக் கணக்கில் பேணுவது தேவையானதாகும். குறித்த வெ ளிநாட்டவர்களினால் நாட்டில் மேற்கொள்ளப்படும் செலவுகள் மூலம் ஹோட்டல், களியாட்டங்கள், போக்குவரத்து போன்ற எமது உற்பத்திகள் மற்றும் சேவைகளுக்கு கேள்வி எழுவதோடு, சொந்த தனியார் வெளிநாட்டு முதலீட்டினை பயன்படுத்தி இலங்கையில் வியாபாரங்களை ஆரம்பிப்பதற்கு அவர்களை ஊக்குவிப்பதன் மூலம் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகளும் அதே போன்று புதிய வர்த்தக பங்களார்களையும் கண்டறியும் வாய்ப்பு உருவாகும். இந்த விசேட விசா உரிமையாளர்களுக்கு இலங்கையில் தொழில்களில் ஈடுபடுவது தடைசெய்யப்படும். இதற்கமைவாக உத்தேச விசேட வைப்பு கணக்கு சட்டத்தை வரைவதற்காக சட்டவரைநருக்கு தொடர்புபடுத்தும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.