• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
செயலாற்றுகை மற்றும் வினைத்திறன் முகாமைத்துவ பிரிவொன்றைத் தாபித்தல்
- நிலைபேறுடையதும் நிலையானதுமான அரசாங்க நிதி முகாமைத்துவத்திற்கும் பொதுமக்களிடமிருந்து அறவிடப்படும் வரிகளை அவர்களுடைய நம்பிக்கையை பாதுகாக்கும் விதத்தில் வினைத்திறனுடனும் பயனுள்ள வகையிலும் பயன்படுத்தும் பொருட்டு செயலாற்றுகை முகாமைத்துவம் மிக முக்கியமானதாகும். ஆயினும், அரசாங்க நிதிகளை வினைத்திறனுடனும் பயனுள்ள வகையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளமை பற்றியும் அவற்றிலிருந்து எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள் அடையப்பட்டுள்ளதா என்பது பற்றி ஆராய்வதற்கான நிறுவனமொன்று இல்லாமை இதுவரை குறைபாடாக இருந்துவந்துள்ளது. இதற்கமைவாக பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவின் சிபாரிசின் பிரகாரம் அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரசாங்க தொழில்முயற்சிகள் அரசாங்க நிதிகளை வினைத்திறனுடனும் பயனுள்ள வகையிலும் பயன்படுத்துகின்றனவா என்பதை ஆராய்வதற்காக செயலாற்றுகை மற்றும் வினைத்திறன் முகாமைத்துவ பிரிவொன்றை பொதுத் திறைசேரியின் கீழ் தாபிக்கும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.