2016-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கண்ணியமிகு சமூகமொன்றை கட்டியெழுப்பும் நோக்கில் மத நிலையங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டம் - கண்ணியமிகு சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்காக சமூகத்தில் மதம் சார்ந்த பெறுமதிகளை வளர்க்க வேண்டுமென்பதோடு, அதற்காக இந்த செயற்பாட்டில் நேரடியாக ஈடுபட்டுள்ள மத நிலையங்களை அபிவிருத்தி செய்வதன் மூலம் நாட்டில் மத ரீதியிலான எழுச்சியினை உருவாக்கும் பொருட்டு நாடுமுழுவதும் பல்வேறுபட்ட மாகாணங்களில் தெரிவுசெய்யப்பட்ட சில மதவழிபாட்டுத் தலங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூக்கிய நோக்கமாவது சமூகத்தில் காணக்கிடைக்கும் மத ரீதியிலான சீரழிவினைத் தவிர்த்து மத போதனைகளைக் கொண்டவொரு கண்ணியம்மிக்க சமூகமொன்றை கட்டியெழுப்பும் பொருட்டு மத ரீதியிலான அணுகலைப் பயன்படுத்துவதாகும். இதற்கமைவாக, சமூகத்தில் மத ரீதியிலான பெறுமதிகளை வளர்க்கும் செயற்பாட்டினுள் நேரடியாக ஈடுபட்டுள்ள மத நிலையங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஒருங்கிணைக்கும் பொருட்டு சனாதிபதியின் செயலாளர் , பிரதம அமைச்சரின் செயலாளர், புத்தசாசன அமைச்சின் செயலாளர் போன்ற உத்தியோகத்தர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |