2016-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மாத்தறை மாவட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய குறுகியகால நீர்வழங்கலை மேம்படுத்தல் - மாத்தறை மாவட்டத்திற்குள் மாத்தறை மற்றும் வெலிகம நகரசபை பிரதேசங்களிலும் பிரதேச சபை பிரதேசங்களிலும் வெவ்வேறு இரண்டு நீர் வழங்கல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதோடு, நாளுக்குநாள் அதிகரித்து வரும் நுகர்வோரின் கேள்வியினை நிறைவு செய்யும் போது இந்த இரண்டு நீர் வழங்கல் திட்டங்களினதும் கொள்ளளவு போதுமானதாகவில்லை. இதற்கு தீர்வொன்றை வழங்கும் நோக்கில் "மாத்தறை கட்டம் IV நீர் வழங்கல் கருத்திட்டம்" நடைமுறைப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, இந்தக் கருத்திட்டம் 2019 ஆம் ஆண்டில் பூர்த்தியடையும். அதுவரை மாத்தறை மாவட்டத்தின் மாத்தறை மற்றும் வெலிகம நீர் வழங்கல் திட்டங்களில் நிலவும் பிரச்சினைகளுக்கு குறுகியகால துரித தீர்வுகளை அறிமுகப்படுத்தும் நோக்கில், மாலிம்பட மற்றும் ஹல்லல நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் உற்பத்தி ஆற்றலை விருத்தி செய்வதற்கான பணிகளை 477 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பிடப்பட்ட செலவில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |