• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி துறையின் அபிவிருத்திக்கும் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்குமாக கடன் வசதிகளை ஏற்பாடு செய்தல்
- நாடு முழுவதும் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதன் மூலம் நாட்டிலுள்ள சகல கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளையும் அபிவிருத்தி செய்வதற்கான கிராமிய புத்துயிரூட்டல் நிகழ்ச்சித்திட்டத்தின் சார்பில் 19,875 மில்லியன் ரூபா 2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் குறித்தொதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியங்களிலிருந்து 4,000 மில்லியன் ரூபாவைப் பயன்படுத்தி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி துறையில் கூடுதலாக தொழில்வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் இந்த துறைக்காகப் பொருத்தமான கடன் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக "சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி துறையை அபிவிருத்தி செய்தல் மற்றும் தொழில்வாய்ப்புகளை உருவாக்குதல்" என்னும் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.