• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களுத்துறை பிரதேச செயலகத்திற்காக புதிய நான்கு மாடி கட்டடமொன்றை நிருமாணித்தல்
- களுத்துறை நகரத்தை மையமாகக் கொண்டுள்ள களுத்துறை பிரதேச செயலகப் பிரவில் 87 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளதோடு, இங்கு வசிக்கும் மொத்த சனத்தொகை 159,225 ஆகும். களுத்துறை பிரதேச செயலகமானது தற்போது களுத்துறை மாவட்ட செயலகத்தின் இரண்டாவது மாடியில் தாபிக்கப்பட்டுள்ளதோடு, நிலவும் ஆகக்குறைந்த இடவசதி காரணமாக அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கும் அதேபோன்று சேவை நாடும் பொது மக்களுக்கும் பல்வேறுபட்ட இன்னல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. ஆதலால் களுத்துறை பிரதேச செயலகத்துக்காக 180 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பிடப்பட்ட மொத்த செலவில் புறம்பான கட்டடமொன்றை நிருமாணிக்கும் பொருட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது..