• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களுத்துறை மாவட்ட செயலகத்திற்காக புதிய கட்டடமொன்றை நிருமாணித்தல்
- மேல் மாகாணத்திற்கு உரிய களுத்துறை மாவட்டம் 14 பிரதேச செயலகப் பிரிவுகளையும் 762 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் கொண்டுள்ளதோடு, அதன் மொத்த சனத்தொகை 1,217,374 ஆகும். தற்போது 1,100 ஊழியர்கள் சேவை புரியும் களுத்துறை மாவட்ட செயலகமானது 45 வருடங்களுக்கு மேலாக பழமைவாய்ந்த கட்டடமொன்றில் தாபிக்கப்பட்டுள்ளதோடு, அங்குள்ள வரையறுக்கப்பட்ட இடவசதி பதவியணியினருக்கும் பொது மக்களுக்கும் போதுமானதாக இல்லை. இதற்கமைவாக தற்போதுள்ள கட்டடத்திற்குள் செய்யப்பட வேண்டிய திருத்த வேலைகளுடன் அதற்கண்மையில் 110.3 மில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ள மொத்த செலவில் களுத்துறை மாவட்ட செயலகத்துக்குப் புதிய கட்டடமொன்றை நிருமாணிக்கும் பொருட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.