• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வீடற்றவர்களுக்கு இருப்பிடங்களை வழங்கும் சருவதேச ஆண்டு - 1987
- முன்னாள் இலங்கையின் பிரதம அமைச்சரும் அதேபோன்று வீடமைப்பு அமைச்சருமான காலஞ்சென்ற ரணசிங்க பிரேமதாச அவர்களின் பிரேரிப்பொன்றுக்கு அமைய உலகம் முழுவதுமுள்ள வீடற்ற மக்களின் வீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் 1987 ஆம் ஆண்டு "வீடற்றவர்களுக்கு இருப்பிடங்களை வழங்கும் சருவதேச ஆண்டாக" ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 35 ஆவது கூட்டத்தொடரில் பிரகடனப்படுத்தப்பட்டது. இதற்கு ஒருங்கிணைவாக இலங்கையினால் அபிவிருத்தி அடைந்து வரும் ஒருசில நாடுகளின் ஒத்துழைப்புடன் பல்வேறுபட்ட மனித குடியேற்ற கருத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. வீடற்றவர்களுக்கு இருப்பிடங்களை வழங்கும் சருவதேச ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டு 30 வருடங்கள் 2017 ஆம் ஆண்டில் பூர்த்தியாகின்றமையினால் அதனை நினைவுகூருமுகமாக நாட்டில் தெரிவு செய்யப்பட்ட ஒருசில மாவட்டங்களில் மாதிரி கிராமங்களையும் கம்முதா வீட்டுத் திட்டங்களையும் அபிவிருத்தி செய்தலும் 2017 சனவரி 01 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிப்பதற்கும் தெரிவு செய்யப்பட்ட மனித குடியேற்ற கருத்திட்டங்கள் சிலவற்றை பூர்த்தி செய்து கையளிப்பதற்கும் ஞாபகார்த்த நிகழ்ச்சித்திட்டங்கள் சிலவற்றை ஒழுங்கு செய்வதற்குமாக வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.