• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை, அரசாங்க பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் மற்றும் எல்கடுவ பிளான்டேஷன் கம்பனி ஆகியவற்றை மீளமைப்பதற்கு முன்னர் சம்பளம் வழங்கும் பொருட்டு நிதி ஏற்பாடுகளைப் பெற்றுக் கொள்ளல்
- நட்ட நிலையில் உள்ளதன் காரணமாக அரசாங்கத்திற்கு செலவுப் மிக்கதாக காணப்படும் தற்போது மீளமைக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்ற மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை, இலங்கை அரசாங்க பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் மற்றும் எல்கடுவ பிளான்டேஷன் கம்பனி ஆகியவற்றின் ஊழியர்களுக்கு நடப்பாண்டின் மீதி காலப்பகுதிக்கு சம்பளம் செலுத்துவதற்காக பொதுத் திறைசேரியினால் நிதி ஏற்பாடுகளை வழங்கும் பொருட்டு அரசாங்க தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.