2016-07-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பாடசாலைகளில் விஞ்ஞானம், தொழினுட்பம், பொறியியல், மற்றும் கணித கல்வியை மேம்படுத்தும் மற்றும் பிரபல்யப்படுத்தும் கருத்திட்டம் - எதிர்கால உலகின் தொழில்வாய்ப்புகளில் 65 சதவீதம் விஞ்ஞானம், தொழினுட்பம், பொறியியல், மற்றும் கணித கல்வி சார்ந்தவையாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஆயினும் இலங்கையில் இந்த விடயங்களை கற்பது சுமார் 30 சதவீதமானவர்களாவர். கல்வித்துறை சார்ந்த உலக தொழிற்சந்தையுடன் ஒப்பிடும் போது இந்த நூற்றுவீதமானது மிகக் குறைந்த பெறுமதியினை எடுக்கின்றமையினால் விஞ்ஞானம், தொழினுட்பம், பொறியியல், மற்றும் கணித துறைசார்ந்த கல்வி கற்பதனை மாணவர்களுக்கு இடையே பிரபல்யப்படுத்துவதற்கும் விஞ்ஞானம் மற்றும் தொழினுட்ப பாடங்களுக்குரிய கற்கும் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் கல்வி அமைச்சு அடங்கலாக இயைபுள்ள ஏனைய அமைச்சுக்களினதும் ஒத்துழைப்புடன் பாடசாலைகளில் விஞ்ஞானம், தொழினுட்பம், பொறியியல், மற்றும் கணிதம் சார்ந்த கல்வியை மேம்படுத்துவதற்கும் புதிய உற்பத்திகளுக்கான அறிவை பயனுள்ள வகையில் பாடசாலை மாணவர்களுக்கு இடையே பகிர்ந்தளிக்கும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டும் விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |