• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுயாதீனமான விமான விபத்து விசாரணை பணியகமொன்றைத் தாபித்தல்
- இலங்கையும் அங்கத்துவம் வகிக்கும் சர்வதேச சிவில் விமான சேவைகள் சமவாயத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக ஒவ்வொரு உறுப்பு நாடும் தங்களுடைய நீதிமன்ற அதிகார பிரதேசத்திற்குள் நிலவும் விமான விபத்துக்களையும் அவற்றுக்குரிய நிகழ்வுகள் சம்பந்தமாகவும் புலனாய்வுப் பணிகளைச் செய்யும் பொருட்டு சுயாதீனமான அமைப்பொன்றை தாபிப்பது அத்தியாவசியமானதாகும். விமான சேவைகளின் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்கும் எதிர்காலத்தில் நிகழக்கூடிய விமான விபத்துக்கள் மற்றும் சம்பவங்களைத் தடுப்பதற்கும் ஏதேனும் விபத்தொன்றுக்கு அல்லது அத்தகைய எதிர்பாராத சம்பவமொன்றுக்கு ஏதுவாய் அமைந்த காரணிகளை இனங்கண்டு விமான சேவை முறைமைகளின் மேம்பாட்டுக்காக சிபாரிசுகளைச் சமர்ப்பிப்பதும் இதன் நோக்கமாகும். 2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சிவில் விமான சேவைகள் சட்டத்திற்கு அமைவாக இலங்கை எல்லையினுள் நிகழும் விமான விபத்துக்கள் மற்றும் எதிர்பாராத சம்பங்கள் சம்பந்தமாக புலனாய்வு செய்யும் பொறுப்பும்கூட கையளிக்கப்பட்டுள்ளது . இலங்கை விமான சேவைகள் அதிகாரசபைக்காகும். இதற்கமைவாக, சர்வதேச சிவில்விமான சேவைகள் சமவாயத்தின் கீழான பொறுப்புகளின் பிரகாரம் விமான விபத்துக்கள் மற்றும் சம்பவங்கள் பற்றி புலனாய்வு செய்யும் சுயாதீன நிறுவனமொன்றாக "இலங்கை விமான விபத்து விசாரணை பணியகம்" தாபிப்பதற்காக தேவையான சட்டங்களை வரையும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.