• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வெளிநாட்டு பயணங்களுக்காக அரசாங்கத்தின் நிதிகளை திறம்பட பயன்படுத்தல்
- அரசாங்க நிதிகளை செலவு செய்யும் போது சிக்கனமாகவும் பொறுப்புடனும் செயலாற்றுவது மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் அனைவரினதும் கடமையாகும். இதற்கமைவாக, அரசாங்க நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆயினும், இந்த அறிவுறுத்தல்களுக்கு முரணாக முக்கியமாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் மக்கள் பிரதிநிதிகளும் அரசாங்க உத்தியோகத்தர்களும் அரசாங்க நிதிகளையும் வௌிநாட்டுக் கருத்திட்டங்களின் மூலம் கிடைக்கும் நிதியங்களையும் பயன்படுத்தி சில சந்தர்ப்பங்களில் குழுக்களாக வௌிநாட்டுப் பயணங்களில் ஈடுபடுவது அவதானிக்கப்பட்டுள்ளது. ஆதலால், அரசாங்க நிதியங்களை முக்கியமாக வௌிநாட்டு நன்கொடைகளையும் வௌிநாட்டுக் கடன்களையும் பயனுள்ள வகையில் பயன்படுத்தும் தேவை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, மக்கள் பிரதிநிதிகளும் அரசாங்க உத்தியோகத்தர்களும் வௌிநாட்டுப் பயணங்களில் ஈடுபடுவது சம்பந்தமாக பொருத்தமான வழிமுறையொன்றை வகுத்தமைக்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.