• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மத்திய அதிவேக பாதையின் 3 ஆம் கட்டத்திற்கும் களனி பாலத்திலிருந்து இராஜகிரிய வரை உயர்த்தப்பட்ட வீதியின் சார்பில் கடன் தொகையொன்றைப் பெற்றுக் கொள்தல்
- இலங்கை அரசாங்கத்தினால் முன்னுரிமை அபிவிருத்திக் கருத்திட்டமொன்றாக இனங் காணப்பட்டுள்ள மத்திய அதிவேக பாதையை நிருமாணித்தல் மற்றும் களனி பாலத்திலிருந்து இராஜகிரிய வரை உயர்த்தப்பட்ட வீதியை நிருமாணித்தல் என்பவற்றை துரிதமாக நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். மத்திய அதிவேக பாதைக் கருத்திட்டத்தின் 3 ஆம் கட்டமான பொத்துஹரயிலிருந்து கலகெதர வரையிலான பகுதியையும் களனி பாலத்திலிருந்து இராஜகிரிய வரை உயர்த்தப்பட்ட வீதியையும் நிருமாணிப்பதற்காக Tokyo - Mitsubishi UFJ, Ltd வங்கியிடமிருந்து சலுகைக் கடன் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கு பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதோடு, இதற்கமைவாக தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.