2016-07-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பெருந்தோட்டத் துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட 2,500/- ரூபாவைக் கொண்ட மாதாந்த சம்பள அதிகரிப்பை வழங்குதல் - பெருந்தோட்டத் துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு அரசாங்கத்தினால் தனியார்துறை ஊழியர்களுக்கு முன்மொழியப்பட்ட 2,500/- ரூபாவைக் கொண்ட மாதாந்த சம்பள அதிகரிப்பை வழங்குதல் வேண்டும். கடந்த காலப்பகுதியினுள் உலக சந்தையில் தேயிலையின் விலை குறைவடைந்தமையினால் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் முகம்கொடுத்துள்ள கடும் நிதி பிரச்சினைகளைக் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு இந்தக் கம்பனிகளின் ஊழியர்களுக்கு உரிய சம்பள அதிகரிப்பினை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு அரசாங்கத்தினால் நிதி ரீதியிலான சலுகையொன்றை வழங்குவதற்கு பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளுக்கு இலங்கை தேயிலை சபையின் ஊடாக அரசாங்க வங்கிகளின் மூலம் கடன் பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் திறைசேரி பிணைகளை வழங்கும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|