2016-07-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
களுத்துறை பொலிஸ் கல்லூரியில் விடுத்திக் கட்டடமொன்றை நிருமாணித்தல் - களுத்துறையில் உள்ள பொலிஸ் கல்லூரியின் ஊடாக நாட்டிலுள்ள அனைத்துப் பொலிஸ் நிலையங்களையும் தழுவும் விதத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொள்ளும் பொலிஸ் சேவைக்குரிய சகல பயிற்சி பாடநெறிகளும் நடாத்தப்பட்டு வருகின்றது. இங்கு பயிற்சி பெறும் உத்தியோகத்தர்களின் பயன்பாட்டிற்காக நிருமாணிக்கப்பட்டுள்ள பல விடுதிக் கட்டடங்கள் 100 வருடங்களுக்கு மேலாக பழைமை வாய்ந்தவையானதோடு, அவை சேதமுற்ற நிலையில் உள்ளன. இதன் காரணமாக பயிற்சி பாடநெறிகளில் கலந்துகொள்ளும் உத்தியோகத்தர்களுக்குப் போதுமானவாறு விடுதி வசதிகள் வழங்குவதில் பிரச்சினை நிலவுகின்றது. ஆதலால், 199.69 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பிடப்பட்ட மொத்த செலவில் களுத்துறை பொலிஸ் கல்லூரி சார்பில் நவீன வசதிகளுடன் கூடிய விடுதிக் கட்டடமொன்றை நிருமாணிக்கும் பொருட்டு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |