• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நலன்புரி முகாம்களில் வசிக்கும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த குடும்பங்களை மீளக்குடியமர்த்துதல்
- அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் நலன்புரி முகாம்களில் வசிக்கும் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ள அனைவரையும் உடனடியாக மீளக்குடியமர்த்தும் தேவை வலியுறுத்தப்பட்டுள்ளது. நலன்புரி முகாம்களில் வசிக்கும் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ள அனைவரையும் மீளக்குடியமர்த்தும் பொருட்டு முன்னுரிமை அடிப்படையில் வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது அத்தியாவசியமானதாகும். தற்போது யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள 31 நலன்புரி முகாம்களில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த 971 குடும்பங்கள் வசிக்கின்றதோடு, இவர்களுள் 641 குடும்பங்கள் காணியற்ற குடும்பங்களாகும். இதற்கமைவாக நலன்புரி முகாம்களில் வசிக்கும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த குடும்பங்கள் சார்பில் 971 மில்லியன் ரூபாவைக் கொண்ட மொத்த செலவில் நிரந்தர வீடுகளை துரிதமாக நிருமாணிக்கும் பொருட்டு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு , மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.