• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2017 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தை தயாரித்தல்
- அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நடுத்தவணை கால குறியிலக்கான பத்துலட்சம் தொழில்வாய்ப்புகளை உருவாக்குதல், வருமானத்தினை அதிகரித்தல், கிராமிய பொருளாதார அபிவிருத்தி, காணி உரிமைகளை உறுதிப்படுத்தல் போன்றவற்றை அடைவதற்கு இயலுமாகும் வகையிலும் ஐக்கிய நாடுகளின் அமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள 2030 ஆம் ஆண்டளவில் அடைய வேண்டிய 17 நிலைபேறுடைய அபிவிருத்தி இலக்குகளை அடைவதனையும் கவனம் செலுத்தி, அரசாங்க செலவுகளின் வினைத்திறனை அடிப்படையாகக் கொண்டு "வினைத்திறன்மிக்க கலாசாரமொன்றை" உருவாக்கி பூச்சிய அடிப்படையிலான வரவுசெலவுத்திட்ட வழிமுறையின் கீழ் 2017 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தை தயாரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்போது, “வௌிப்படைத்தன்மை" மற்றும் "பொறுப்பு" போன்ற நல்லாட்சி மூலதத்துவங்களுக்கு உயர் முன்னுரிமை வழங்கி அரசாங்கத்துறையின் நிதி கட்டுப்பாட்டை மீண்டும் உருவாக்குவதற்கு 2017 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தை பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அரசாங்க நிதி ஒருநிலைத்தன்மையை முன்னெடுத்து செல்லும்போது பல்வேறுபட்ட சவால்களுக்கு முகம்கொடுக்க நேரிடும். முக்கியமாக உலகளாவிய பொருளாதாரத்தின் புதிய போக்கின் மீது வௌிநாட்டு மூலதனத்தைக் கவர்வதற்கும் அதேபோன்று வெளிநாட்டு வர்த்தகத்தை விரிவுபடுத்துவதன்பாலும் தாக்கம் செலுத்தப்படலாம். இதன் பெறுபேறாக உருவாகக்கூடிய பொரளாதார வளர்ச்சி இலக்கு குறைவடையும் அவதானத்திற்கு முகம்கொடுப்பதைத் தவிர்க்கும் பொருட்டு அரசாங்க வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கும் மிக பயனுள்ள அரசாங்க செலவுகளை ஏற்பதன் மூலமும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கச் செய்வது அரசாங்க நிதிக் கொள்கையின் முன்னுரிமையாகும். இதன்போது முகம்கொடுக்க வேண்டிவரும் குறுகியகால சமமற்றநிலைமை மற்றும் நடுத்தவணைகால சவால்கள் என்பன சார்பில் தீர்வுகளை வழங்கக்கூடிய விரிவான திறமுறையொன்று அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக தேறிய உள்நாட்டு உற்பத்தியின் நூற்றுவீதமாக எடுக்கப்படும்போது 2020 ஆம் ஆண்டில் வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை 3.5 சதவீத மட்டத்திலும் அரசாங்க கடன் நூற்றுவீதம் 68 சதவீத மட்டத்திலும் கொண்டுவருவது நடுத்தவணைகால முழுமொத்த பொருளாதார குறியிலக்காகும். இந்த குறியிலக்கை அடைவதற்கு இயலுமாகும் வகையில் 2017 ஆம் ஆண்டில் 6 சதவீதமான பொருளாதார வளர்ச்சி வேகத்தை அடைவதற்கும் தேறிய உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீத அரசாங்க மூதலீட்டினை உறுதிப்படுத்தி தேறிய உள்நாட்டு உற்பத்தியின் 4.7 சதவீதமான வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையுடனும் ஆகக்குறைந்த மட்டத்தில் பணவீக்கத்தையும் தொழிலற்ற நூற்றுவீதத்தையும் பேணுவதற்கும் இயலுமாகும் வகையில் 2017 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தைத் தயாரிக்கும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.