2016-07-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உள்ளூராட்சி நிறுவனங்களின் மேம்பாட்டுக் கருத்திட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துதல் - தற்போது செயற்படுத்தப்பட்டுள்ள "உள்ளூராட்சி நிறுவனங்களின் மேம்பாட்டுக் கருத்திட்டத்தின்" சாதகமான நிலைமையின் மீது அதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 60 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட மேலதிக சலுகைக் கடன் தொகையொன்றை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. இந்த நிதியை அரசாங்கத்தின் முன்னுரிமை பணிகளாக இனங்காணப்பட்டுள்ள நீண்டகால சிறுநீரக நோய் பரந்துபட்டு காணப்படும் பிரதேசங்களில் நீர் விநியோக முறைமையை மேம்படுத்துவதன் மூலம் இந்த நோய் ஆபத்தினை குறைத்தல், பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட அடிப்படை சேவைகள் வழங்குவதை விருத்தி செய்தல் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் மீளமைப்பு பணிகளை துரிதப்படுத்துதல், இந்த நிறுவனங்களின் ஆற்றலை விருத்தி செய்தல் போன்ற துறைகளை குறியிலக்காகக் கொண்ட கருத்திட்டங்களுக்காக பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைவாக குறித்த கருத்திட்டங்களை பயன்படுத்தி உள்ளூராட்சி நிறுவனங்களின் மேம்பாட்டுக் கருத்திட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்காக உரிய சலுகை கடன் தொகையை பெற்றுக் கொள்வதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |