2016-07-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தொழினுட்ப சார்ந்த புலமைப்பரிசில் நிதியம் - க.பொ.த (உ.த.) சார்பில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தொழினுட்ப பாடநெறியைக் கற்கும் குறைந்த வருமானம்பெறும் மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் புலமைப் பரிசில் நிகழ்ச்சித்திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 100 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி உதவி கிடைத்துள்ளதோடு, இந்த நிகழ்ச்சித்திட்டம் பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும். ஆயினும், அவ்வாறு வழங்கப்பட்ட நிதியங்களிலிருந்து கணிசமான அளவு நிருவாக ரீதியிலான நோக்கங்களுக்கு பயன்படுத்த நேரிடுகின்றமையினால் புலமை பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களை அடையமுடியாதநிலை உருவாகியுள்ளது. இதற்கமைவாக, உரிய நிதியத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களுக்கு பயன்படுத்துவதற்காகவும் இதன் மூலம் கூடிய மாணவர்களுக்கு நன்மை கிடைக்கக்கூடிய விதத்திலும் தற்போது பொது நம்பிக்கை பொறுப்பாளர் திணைக்களத்திற்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள நிதியை கல்வி அமைச்சுக்கு உடைமையாக்கிக் கொள்வதற்கும் அதன் பின்னர் பொது திறைசேரியின் உரிய செலவுத் தலைப்பின் கீழ்' வரவுசெலவுதிட்டத்தின் மூலம் வருடாந்த நிதி ஏற்பாடுகளை ஒதுக்கிக்கொண்டு இந்த புலமைப் பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தை தொடர்ச்சியாக பேணும் பொருட்டு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |