2016-07-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வாழ்வாதார அபிவிருத்தியின் பொருட்டு நிதி ஏற்பாடுகளை குறித்தொதுக்குதல் - “கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டம்" சார்பில் 13.3 பில்லியன் ரூபாவைக் கொண்ட வரவுசெலவுத்திட்ட நிதி ஏற்பாடுகள் 2016 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் குறித்தொதுக்கப்பட்டுள்ள தோடு, இந்தக் கருத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அரசாங்க மற்றும் மாகாண மட்டத்தில் பல்வேறுபட்ட நிறுவனங்களினால் நடைமுறைப்படுத்தப்படும் சிறிய அளவிலான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டதின் மூலம் தழுவப்படாத பொது மக்களை குறியிலக்காகக் கொண்டு கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் கிராமிய வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்யும் முன்னோடிக் கருத்திட்டமொன்றை அநுராதபுரம், மட்டக்களப்பு, பொலன்நறுவை ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |