• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வெலிக்கடை சிறைச்சாலையை வேறு இடத்திற்கு கொண்டு செல்தல்
- இலங்கையிலுள்ள சிறைச்சாலைகள் பல உரிய நகரங்கள் மத்தியிலும் பொருளாதார ரீதியில் உயர் முக்கியத்துவம் கொண்ட காணிகளிலும் அமைந்துள்ளன. நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளை வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்லும் நிகழச்சித்திட்டத்தின் கீழ் வெலிக்கடைச் சிறைச்சாலையையும் அதன் பகுதிகளையும் வேறு இடத்தில் தாபிப்பதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலைக் கட்டடத்தொகுதி ஒன்றுடன்ஒன்று வேறுபட்ட 04 பிரிவுகளைக் கொண்டுள்ளதோடு, அவற்றில் எந்நேரமும் நீதிமன்றத்திற்கு ஆற்றுப்படுத்த வேண்டிய சந்தேக நபர்களைத் தடுத்துவைக்கும் தடுப்புக் காவல் நிலையத்தை தாபிப்பதற்காக மீயுயர் நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ள வரையறுக்கப்பட்ட பீ.சீ.சீ.லங்கா கம்பனிக்குச் சொந்தமான காணியை உடைமையாக்கிக் கொள்ளும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.