• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஜேர்மன் பெடரல் குடியரசு அரசாங்கத்திடமிருந்து 13 மில்லியன் யூரோக்களை தொழினுட்ப ஒத்துழைப்புக் கொடையாகப் பெற்றுக் கொள்ளல்
- வில்பத்து தேசிய பூங்கா மற்றும் அதன் சுற்று வலைய முகாமைத்துவக் கருத்திட்டம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொழிற்பயிற்சிக் கருத்திட்டம், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சி அபிவிருத்திக் கருத்திட்டம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கு வசதிகளை ஏற்பாடு செய்யும் கருத்திட்டம் ஆகிய நான்கு (04) கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் 2016 பெப்ரவரி மாதம் ஜேர்மனிக்கு மேற்கொள்ளப்பட்ட விஜயத்தின் போது ஜேர்மன் பெடரல் குடியரசு அரசாங்கத்திடமிருந்து 13 மில்லியன் யூரோக்களை தொழினுட்ப ஒத்துழைப்புக் கொடையாகப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்காக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.