• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய அபிவிருத்தியின் பொருட்டு சிவில் மற்றும் இராணுவ துறைகள் ஒருங்கிணைப்பதற்காக அமைப்பொன்றை தாபித்தல்
- தேசத்தை கட்டியெழுப்பும் பொருட்டு இலங்கை முப்படைகளுக்குமுள்ள ஆற்றலையும் வளங்களையும் இலகுவாக பயன்படுத்தலாமென்பதோடு, பல்வேறுபட்ட துறைகள் சம்பந்தமாக அவர்களுக்குள்ள அறிவைப் பயன்படுத்தி தேசத்தைக் கட்டியெழுப்பும் பொறிமுறை சம்பந்தமான பொறுப்பினை ஏற்பதற்கு அவர்கள் தயாராகவே உள்ளனர். ஆதலால், முப்படைகளுக்கும் சொந்தமான வளங்கள், சக்தி மற்றும் பயிற்சி மொத்த தேசிய அபிவிருத்திக்கும் சமாதானத்தை நிலைநாட்டும் செயற்பாட்டிற்கும் பெற்றுக் கொள்வதற்காக சிவில் உத்தியோகத்தர்களுடன் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் செயலாற்றும் சிவில் மற்றும் இராணுவ துறைகள் ஒருங்கிணைந்த அமைப்பொன்றை தாபிக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.