• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசகரும மொழிக் கொள்கையை பயனுள்ள வகையில் அமுல்படுத்து வதற்காக வருடாந்த வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டில் விசேட தலைப்பொன்றை உருவாக்குதல்
- இலங்கை அரசியலமைப்பின் மூலம் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகள் அரசகரும மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோடு, இலங்கை பிரசைகளுக்கு எந்தவொரு அரசாங்க நிறுவனத்திலும் தமக்கு விருப்பமான அரசகரும மொழியில் சேவைகளை செய்து கொள்விக்கும் உரிமையும்கூடப் பாதுகாக்கப்பட்டுள்ளது. அரசகரும மொழி கொள்கைக்கு அமைவாக, இந் நாட்டிலுள்ள சகல அரசாங்க நிறுவனங்களும் சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் சேவையாற்றுவதற்குக் கட்டுப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டாகும் போது பிரசைகளுக்கு தாம் விரும்பும் அரசகரும மொழியொன்றில் சேவையைப் பெற்றுக் கொள்வற்கான வசதிகளை ஏற்பாடு செய்யும் நோக்கில் அரச கரும மொழிக் கொள்கையை அமுல்படுத்துவதற்காக 2017 ஆம் ஆண்டிலிருந்து சகல அமைச்சுக்களினதும் வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகளில் புறம்பான செலவு விடயமொன்றின் கீழ் நிதி ஏற்பாடுகளை குறித்தொதுக்கும் பொருட்டு தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.