2016-07-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2015 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்புச் சட்டத்தை திருத்துதல் - 2015 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டமானது 2016 மே மாதம் 16 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின் கீழ் இலங்கைக்கு வெளியே வேறு இடமொன்றிலிருந்து சாட்சிகளை வழங்குவதற்கு அனுமதிகோரி வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக குற்றமொன்றில் பலியாக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகயாளர்களின் ஏதேனும் சாட்சியொன்று அல்லது வெளிப்படுத்தலொன்று தனிப்பட்ட முறையில் நீதிமன்றமொன்றின் முன் ஆஜராகாமல் இலங்கையிலிருந்து வெளியே எந்தவொரு இடத்திலிருந்தும் செவிப்புல கற்புல இணைப்பின் ஊடாக வழங்குவதற்கும் அவ்வாறு இலங்கைக்கு வெளியேயிருந்து சாட்சி வழங்கும் போது வெளிநாடுகளிலுள்ள இலங்கை இராஜதந்திர தூதரகமொன்றிலிருந்து சாட்சி வழங்கப்பட வேண்டுமெனவும் அவ்வாறு சாட்சி வழங்கும் ஆளின் சுதந்திரத்தை பாதுகாத்து மட்டுமீறிய செல்வாக்கு செலுத்துவதை தடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்யும் விதத்தில் 2015 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்புச் சட்டத்தை திருத்தும் பொருட்டு நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |