2016-07-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பிரதான சட்டங்களைத் திரட்டுதல் - முன்னைய காலங்களில் ஆக்கப்பட்டுள்ள சட்டங்கள் / சட்டவாக்கங்கள் அடிக்கடி திருத்தப்பட்டதன் காரணமாக அத்தகைய சட்டங்களை புரிந்து கொள்வதில் சிக்கல்களும் கடினமான நிலைமையும் காணக்கூடியதாகவுள்ளது. இந்த நிலைமைக்கு மாற்று வழியாக நீதி அமைச்சரினால் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் உதவியுடன் ஐந்து பிரதான சட்டங்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் மீள வரைவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. அதன்கீழ் இணைப்பதற்குள்ள ஐந்து முக்கிய சட்டங்களில் சாட்சிகள் கட்டளைச்சட்டம், குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை, தண்டனை சட்டக்கோவை என்னும் சட்டவாக்கங்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் போது இந்த சட்டவாக்கங்களிலுள்ள சில பதங்களும் வெளிப்படுத்தல்களும் நடைமுறையில் முற்றுமுழுதாக காலம் கடந்த நிலையில் உள்ளமையினால் இந்த சட்டங்களை / சட்டவாக்கங்களை பயன்படுத்தும் பொது மக்கள் குறித்த பதங்கள் மற்றும் பிரயோகங்களை பிழையாக புரிந்து கொள்ள கூடுமென தெரியவந்துள்ளது. ஆதலால் இந்த சட்டவாங்கங்களிலுள்ள அத்தகைய பதங்களையும் வெளிப்படுத்தல்களையும் நிகழ்காலத்திற்கு ஏற்ற மொழிநடையில் பதிலீடு செய்வதற்கு அல்லது திருத்துவதற்கு நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|