2016-07-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக் கேவையைத் திருத்தம் செய்தல் (சட்டத்தரணி உதவியை நாடுவதற்கான சிறைக் கைதிகளின் உரிமைகள்) - பொலிசாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்திருக்கும் ஆள் ஒருவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் குறித்த நபரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு முன்னர் அந்த ஆளின் தனிப்பட்ட செலவில் அவர் விரும்பும் சட்டத்தரணி ஒருவரின் சேவையைப் பெற்றுக் கொள்வதற்கும் சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்குமுள்ள உரிமையை ஏற்றும் அவ்வாறு சட்டத்தரணி ஒருவரின் சேவையை பெற்றுக் கொள்வதற்கு சாத்தியமில்லையென குறித்த ஆள் வெளிப்படுத்தும் சந்தர்ப்பத்தில் அத்தகைய சேவையை சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்டத்தரணி ஒருவரின் ஊடாக வழங்குவதற்கும் உரியதான ஏற்பாடுகளை செய்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக் கேவை (திருத்தம்) சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன்பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|