• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-07-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஐக்கிய நாடுகளின் வெசாக் தின விழாவை இலங்கையில் நடாத்துதல் - 2017
- 1950 ஆம் ஆண்டில் இலங்கையில் நடாத்தப்பட்ட உலக பௌத்த சம்மேளனத்தில் வெசாக் தினம் சருவதேச ரீதியில் கொண்டாடப்பட வேண்டிய தினமொன்றாக பேராசிரியர் குணபால மலலசேக்கர அவர்களினால் பிரேரிக்கப்பட்டதோடு, அதன் பின்னர் 1999 ஆம் ஆண்டில் இலங்கையின் முன்னாள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு லக்‌ஷ்மன் கதிர்காமர் அவர்களினால் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக்கு முன்வைத்த பிரேரிப்பொன்றுக்கு அமைவாக வெசாக் தினத்தை சருவதேச ரீதியில் கொண்டாடும் சம்பிரதாயம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 2016 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் வெசாக் தின விழா தாய்லாந்தில் நடாத்தப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் வெசாக் தின விழா மற்றும் மாநாட்டை மே மாதம் 12 ஆம் 13 ஆம் திகதிகளில் இலங்கையில் நடாத்துவதற்கும் அதற்குரிய பணிகளை ஒழுங்கு செய்யும் பொருட்டு குழுவொன்றை நியமிப்பதற்காகவும் அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினாலும் பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினாலும் புத்தசாசன அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.