2016-07-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சாலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுத களஞ்சியசாலை வெடித்ததன் காரணமாக பிரதேசவாழ் மக்களின் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் சம்பந்தமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய பிரேரிப்புகள் - 2016-06-05 ஆம் திகதியன்று கொஸ்கம சாலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுத களஞ்சியசாலை வெடித்ததன் காரணமாக சிவிலியன்களின் உயிர் சேதம் எதுவும் அறிக்கையிடாத போதிலும் அதனைச் சுற்றியுள்ள பன்னிரெண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளன. அவ்வாறு சேதமடைந்த வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு நட்டஈடு செலுத்துவது சம்பந்தமாக பரிசீலனை செய்து சிபாசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களின் தலைமைத்துவத்தில் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவின் சிபாரிசின் பிரகாரம் தேவையான சலுகைகளை வழங்குவதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைவாக தங்களுடைய வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் சேதமடைந்த குடும்பங்களுக்கு அவர்கள் மீண்டும் குறித்த மனையிடத்தில் குடியேறும் வரை மாதமொன்றுக்கு 50,000/- ரூபா வீதம் செலுத்தப்படுவதோடு, இதுவரை சுமார் 400 குடும்பங்களுக்கு 50,000/- ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது. சாலாவ மற்றும் அதற்கண்மித்த பிரதேசங்களை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு மேலும் சில மாதங்கள் செல்லக்கூடு மென்பதனால் வீடுகளுக்கு முழுமையான சேதங்கள் அல்லது பகுதி அளவு சேதங்கள் ஏற்பட்ட அத்துடன் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலையிலுள்ள எஞ்சிய குடும்பங்களுக்கும் 50,000/- ரூபா வீதமான மாதாந்த கொடுப்பனவை வழங்குவதற்கும் அசையும் சொத்துக்கள் சேதமடைந்தமை சம்பந்தமாக நட்டஈடு வழங்கும் பொருட்டு அதற்காக நியமிக்கப்படும் மதிப்பீட்டு குழுக்களின் சிபாரிசின் பிரகாரம் துரிதமாக நடவடிக்கை எடுப்பதற்குமாக அனர்த்த முகாமைத் துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|