• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யப்பான் சருவதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் உதவியின் கீழ் இலங்கையின் மேற்குப் பிரதேசத்திற்கு இலகுரக புகையிரத போக்குவரத்து முறைமையொன்றை அறிமுக்கப்படுத்துதல்
- மேல் மாகாணத்தில் நிலவும் போக்குவரத்து பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு மேல்மாகாண வலய மாநகர திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதோடு, பொது போக்குவரத்து சேவைகளை விருத்தி செய்தல், வீதி உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், போக்குவரத்து தேவையின் முகாமைத்துவம் மற்றும் சுற்றாடல் ரீதியிலான நிலைபேறுடைய போக்குவரத்து போன்ற துறைகள் திறமுறை ரீதியில் முக்கியமானதென இனங்காணப்பட்டுள்ளது. மாநாகர வலயத்தில் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளுடன் ஒத்தியிலக்கூடிய மிக பொருத்தமான போக்குவரத்து சேவையானது இலகுரக புகையிரத போக்குவரத்து முறைமையென நிபுணர்களினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதோடு, இதற்கமைவாக ஏழு வீதிகளில் இலகுரக புகையிரத பாதைகளை நிருமாணிக்க வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளன. இந்த இலகு புகையிரத வீதிகளை நிருமாணிப்பதற்கு சாத்தியத் தகவாய்வொன்றைச் செய்யும் பொருட்டு யப்பான் சருவதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கும் அதில் கொழும்பு கோட்டை - கொள்ளுபிட்டிய - பம்பலப்பிட்டிய - யூனியன் பிளேஸ் - மருதானை பிரதேசங்களை இணைத்து செல்லும் உத்தேச இலகு புகையிரத பாதையையும் பொரளை - மாலம்பே பிரதேசங்களுக்கு இடையில் நிருமாணிக்கப்படவுள்ள இலகுரக புகையிரத வீதியையும் நிருமாணிக்கும் பணிகளை துரிதமாக ஆரம்பிக்கும் பொருட்டும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.