• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நேபாளத்தில் நிலநடுக்கம் காரணமாக சேதமடைந்த மதவழிபாட்டுத் தலங்களை மறு சீரமைத்தல்
- நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சேதமடைந்த ஆனந்த குடி பௌத்த விகாரையையும் ராதோ மச்சிந்திரநாத் இந்துக் கோவிலையும் புனரமைப்பதற்காக இலங்கையினால் நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக உரிய நிருமாணிப்பு மற்றும் புனரமைப்பு பணிகளுக்காக நேபாளம் மற்றும் இலங்கை கேள்விதாரர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தி கேள்வி கோரி பொருத்தமான ஒப்பந்தக்கார் ஒருவரை தெரிவு செய்வதற்கும் ஆகக்குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒருதடவை அல்லது தேவையானவாறு இலங்கை தரைப்படையின் பொறியியல் சேவையின் படைப்பிரிவின் தொழினுட்ப வல்லுநர்கள் நேபாளத்திற்குச் சென்று நிருமாணிப்பு மற்றும் புனரமைப்பு பணிகளை மேற்பார்வை செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்வதற்குமாக புத்தசாசன அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.