• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நோய் கண்டறிதலுக்கான விலை கோரல்
- உயர் மட்டத்திலான சுகாதார சேவையொன்றை வழங்கும் பொருட்டு வைத்தியசாலைகளில் புதிய இயந்திரங்களைத் தாபிப்பதற்கும் பத்து வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்த இயந்திரங்களை மீளப் பொருத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பது அத்தியாவசியமானதாகும். இதற்கமைவாக, நோய் கண்டறிதலுக்கு உதவும் எக்ஸ்-ரே பிரிவினை வழங்கி, நிறுவி, நடை முறைப்படுத்துவதற்கான கேள்வியை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.